கொடிசியா மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிய வாலிபர் திடீர் மரணம்!..

published 1 year ago

கொடிசியா மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிய வாலிபர் திடீர் மரணம்!..

கோவை :கோவை வேலாண்டிபாளையம் ஆனந்த ஹவுசிங் காலனியை சேர்ந்தவர் பேச்சிமுத்து மகன் கார்த்திக்(27). 

தனியார் நிறுவன ஊழியர். இவர் வார விடுமுறையில் தனது நண்பர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடுவது வழக்கம்.

இதேபோல், நேற்று அவர் கொடிசியா மைதானத்தில் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென மயங்கி சரிந்தார்.

 இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் அவரை மீட்டு ஆட்டோவில் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். 

ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் கார்த்திக் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

கிரிக்கெட் விளையாடிய போது மைதானத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் அவரது நண்பர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe