கோவையில் கத்தி முனையில் டாஸ்மாக் ஊழியரிடம் பணம் பறிப்பு!..

published 1 year ago

கோவையில் கத்தி முனையில் டாஸ்மாக் ஊழியரிடம் பணம் பறிப்பு!..

கோவை: கோவையில் கத்தி முனையில் மிரட்டி டாஸ்மாக் ஊழியரிடம் பணம் பறித்த மெக்கானிக்கை போலீசார் கைது செய்தனர்.

கோவை கணபதி சுபாஷ் நகரை சேர்ந்தவர் அய்யப்பன்(56). இவர் எப்சிஐ ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையில் வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று டாஸ்மாக் கடை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். 

அப்போது அங்கு வந்த நபர் ஒருவர் அய்யப்பனிடம் மது வாங்க பணம் தருமாறு கேட்டார். அவர் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த அவர் கத்தி முனையில் மிரட்டி அவரிடம் இருந்த ரூ. ஆயிரத்தை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்றார். 

இது குறித்து அய்யப்பன் சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

 அதில், கத்திமுனையில் மிரட்டி பணம் பறித்தது கணபதி வ.உசி நகரை சேர்ந்த கார் மெக்கானிக் ஆனந்த நாராயணன்(56) என்பது தெரிந்தது.

 போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

------------

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe