450 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல்l!..

published 1 year ago

450 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல்l!..

கோவை: கோவை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ளன. தெற்கு, வடக்கு, கிழக்கு, மேற்கு, மத்திய என 5 மண்டலங்கள் உள்ளன. 

8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. 

6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தள்ளுவண்டி கடைகள் உள்ளன.

இந்த கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்களை விற்பனை செய்யக்கூடாது என மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே கோவை மாநகராட்சி கமிஷனர் பிரதாப் உத்தரவுப்படி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் தொடர்பான ஆய்வுகளை அதிகாரிகள் 81வது வார்டுக்குட்பட்ட தாமஸ் வீதி, ஆர்.ஜி.வீதிகளில் மேற்கொண்டனர்.

 அப்போது 450 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்குகள் 18 கடைகளில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டு ரூ.40 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
__

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe