கஞ்சா விற்ற வாலிபர் கைது

published 1 year ago

கஞ்சா விற்ற வாலிபர் கைது

கோவை: கோவை செல்வபுரம் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். 

அப்போது பேரூர் மெயின் ரோட்டில் ஒரு வாலிபர் சந்தேகம்படும் படி நின்றிருந்தார். அவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அதில், அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். 

அவரிடம் சோதனை செய்த போது அவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. 

இதனையடுத்து போலீசார் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ரத்தினபுரி தில்லை நகரை சேர்ந்த விஜய பிரபாகரன்(20) என்பவரை கைது செய்தனர்.

 அவரிடம் இருந்து 150 கிராம் கஞ்சா மற்றும் ரூ. 3 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. 

பின்னர் கைது செய்யப்பட்ட அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe