கோவையில் ரோந்து சென்ற போலீஸ்காரருக்கு அடி

published 1 year ago

கோவையில் ரோந்து சென்ற போலீஸ்காரருக்கு அடி

கோவை: கோவை செல்வபுரத்தில் ரோந்து பணி சென்ற போலீசாரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கோவை செல்வபுரம் காவல் நிலைய போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அவர்கள் செல்வபுரம் 60 அடி ரோட்டில் சென்ற போது, அங்கு வந்த வாலிபர் ஒருவர் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தார். 

பின்னர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்தார். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் தகாத வார்த்தைகளால் பேசி 2 போலீஸ்காரரை கீழே தள்ளி விட்டு தாக்கினார். இதில் அவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. 

இது குறித்து தலைமைக்காவலர் சாலமோன் செல்வபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் விசாரித்தனர். அதில், போலீசாருடன் தகராறு செய்து அவர்களை தாக்கியது செல்வபுரம் இந்திரா நகரை சேர்ந்த கூலி தொழிலாளி ஹபிப் ரகுமான்(38) என்பது தெரியவந்தது. 

போலீசார் அவர் மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe