ரயிலில் அரசு ஊழியரிடம், 10 பவுன் நகை திருடிய வாலிபர் கைது

published 1 year ago

ரயிலில் அரசு ஊழியரிடம், 10 பவுன் நகை திருடிய வாலிபர் கைது

கோவை : ரயிலில் அரசு ஊழியரிடம், 10 பவுன் நகை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

சேலம் மேட்டூரை சேர்ந்தவர் ரத்தினசாமி, 64, ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இவர் தனது மனைவியுடன் கடந்த, சில நாட்களுக்கு முன் சென்னையில் நடைபெற்ற குடும்ப நிகழ்ச்சிக்கு சென்றார்.பின் சென்னையில் இருந்து, 12ம் தேதி பாலக்காட்டில் உள்ள தனது மகனை பார்ப்பதற்காக கோர்பா

எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் பயணம் செய்தார். ரயில் கோவையை நோக்கி வந்து கொண்டிருந்த போது அவர் அயர்ந்து துாங்கி விட்டார். 

சிறிது நேரம் கழித்து விழித்து பார்த்தபோது, 10 பவுன் தங்க நகை வைத்திருந்த அவரது பேக் காணாமல் போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து ரத்தினசாமி பாலக்காட்டில் இருந்து மறுநாள் கோவை வந்து, நகை திருட்டு போனது குறித்து ரயில்வே போலீசில் புகார் அளித்தார். 

புகாரின் படி ரயில்வே இன்ஸ்பெக்டர் மீனாட்சி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரித்து வந்தனர். நேற்று ரயில்வே ஸ்டேஷனில் சந்தேகத்திற்கிடமாக சுற்றி திரிந்த வாலிபர் ஒருவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். 

அதில் அவர் ரத்தினசாமியின் நகையை திருடிய கோவை குறிச்சி பிள்ளையார்புரத்தை சேர்ந்த ராஜேஷ்குமார், 41, என்பது தெரிந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, அவரிடம் இருந்து, 10 பவுன் தங்க நகை, மொபைல் போன், மோடம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின் ராஜேஷ்குமாரை சிறையில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe