உஷார்.. கோவையில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் கத்தி முனையில் நகை பறிப்பு

published 1 year ago

உஷார்.. கோவையில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் கத்தி முனையில் நகை பறிப்பு

கோவை: கோவையில் பட்டப்பகலில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் கத்தி முனையில் 7 பவுன் நகை பறித்து சென்ற 3 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை சிங்காநல்லூர் இருகூரை சேர்ந்தவர் செல்வன். இவரது மனைவி சுகுணா(39). இவர் நேற்று மதியம் 11 மணியளவில் வீட்டில் தனியாக இருந்து வீட்டு வேலைகளை கவனித்து கொண்டிருந்தார். அப்போது அவர் வீட்டு கதவை திறந்து வைத்திருந்ததாக தெரிகிறது.

இதனையடுத்து 3 பேர் கும்பல் அத்துமீறி உள்ளே நுழைந்தனர். அவர்கள் திடீரென கத்திமுனையில் மிரட்டி சுகுணா கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு அவரை மிரட்டி தப்பி சென்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த சுகுணா சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். வீட்டுக்குள் தனியாக இருந்த பெண்ணை கத்தி முனையில் மிரட்டி நகை பறித்து சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe