கோவையில் வேலை பார்த்த கடையிலேயே கைவரிசை காட்டிய ஊழியர்

published 2 years ago

கோவையில் வேலை பார்த்த கடையிலேயே கைவரிசை காட்டிய ஊழியர்

 

கோவை: கோவை கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 53). இவர் கோவை லாலி ரோட்டில் உள்ள எலக்ட்ரிக் மொப்பட் கடையில் மேலாளராக உள்ளார். 

இந்த கடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு எலக்ட்ரிக் மொப்பட்  திருடு போனது. இதுகுறித்து முருகேசன் ஆர்.எஸ்.புரம்  போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். மேலும் கடையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி காமிராவை ஆய்வு செய்தனர். 

அப்போது எலக்ட்ரிக் மொப்பட்டை திருடி சென்றது அதே கடையில் வேலை பார்த்த செல்வபுரம் எல்.ஐ.சி காலனியை சேர்ந்த ரஞ்சித்குமார் (23) என்பது தெரியவந்தது. 

இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ. 80 ஆயிரம் மதிப்பிலான எலக்ட்ரிக் மொப்பட்டை மீட்டனர். ரஞ்சித்குமாரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe