கோவையில் மேற்குவங்காள மாநில தொழிலாளி திடீர் பலி

published 1 year ago

கோவையில் மேற்குவங்காள மாநில தொழிலாளி திடீர் பலி

கோவை:

மேற்குவங்காள மாநிலத்தை சேர்ந்தவர் சமரேஸ் மாலிக்(48). இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கோவை வந்தார். புலியகுளம் பகுதியில் தனது உறவினர் ஒருவருடன் தங்கியிருந்து தனியார் கட்டுமான நிறுவனத்தில் கார்பெண்டராக வேலை பார்த்து வந்தார்.

 சில மாதங்களாக அவர் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், உடல் நலம் சரியில்லாததால் கடந்த 2 நாட்களாக வேலைக்கு செல்லாமல் அறையில் இருந்தார். நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டு விட்டு தூங்க சென்றார். மறுநாள் காலையில் அவர் எந்தவித அசைவுமின்றி பேச்சு மூச்சின்றி மயங்கி கிடந்தார். 

இதனை பார்த்த உடன் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து கோவை அரசு மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe