கோவை - தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் ரூ. 17 லட்சம் மதிப்பிலான உபகரணங்கள் திருடு..!

published 1 year ago

கோவை - தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் ரூ. 17 லட்சம் மதிப்பிலான  உபகரணங்கள் திருடு..!

கோவை:

கோவையில் செயல்பட்டு வரும் தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் ரூ. 17 லட்சம் மதிப்பிலான பெயிண்ட் ரோலர் மற்றும் வால்வு உபகரணங்கள் திருடு போனது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மதுக்கரை விஎஸ்என் கார்டனை சேர்ந்தவர் அருண்பாபு (39). 

இவர் சிட்கோ ரயில்வே கேட் அருகே ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். இங்கு இயந்திரங்களுக்கு வால்வு தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. கடந்த 11 மாதங்களுக்கு முன்பு துவங்கப்பட்ட நிறுவனத்தில் பலர் வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், 8ம் தேதி சீனாவில் இருந்து பெயிண்ட் ரோலர் மற்றும் வால்வு உபகரணங்கள் இறக்குமதி செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ. 17 லட்சம் ஆகும். இந்த உபகரணங்கள் நிறுவனத்தின் அருகே வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த 11ம் தேதி அந்த உபகரணங்களை மர்மநபர்கள் திருடிச்சென்று விட்டனர். 

இதனால் அதிர்ச்சியடைந்த அருண்பாபு இதுகுறித்து போத்தனூர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe