ராமநாதபுரத்தில் இளம் பெண்ணிடம் செல்போன் பறிப்பு

published 1 year ago

ராமநாதபுரத்தில் இளம் பெண்ணிடம் செல்போன் பறிப்பு

கோவை: சேலம் மாவட்டம் வாழப்பாடி பெரியகவுண்டபுரத்தை சேர்ந்தவர் ஏழுமலை மகள் கோமதி(23). இவர் கோவையில் தங்கி தனியார் மருத்துவமனையில் லேப் டெக்னீசியனாக வேலை பார்த்து வருகிறார்.

நேற்று கோமதி ராமநாதபுரம் திருச்சி ரோட்டில் செல்போனில் பேசிய படி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்தொடர்ந்து பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் திடீரென கோமதியின் செல்போனை பறித்து கொண்டு தப்பினர்.

இது குறித்து கோமதி ராமநாதபுரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போன் பறிப்பில் ஈடுபட்ட பைக் ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe