செல்வபுரத்தில் கஞ்சா விற்ற 4 பேர் கைது

published 1 year ago

செல்வபுரத்தில் கஞ்சா விற்ற 4 பேர் கைது

கோவை: கோவையில் கஞ்சா விற்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர். 450 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

கோவை செல்வபுரம் அசோக்நகர் ரவுண்டானா அருகே போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகம்படும் நின்றிருந்த 3 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பேரூர் ஆண்டிபாளையம் எம்.ஜி.ஆர். தெருவை சேர்ந்த கார்த்திக்(26), செல்வபுரம் செட்டி தெருவை சேர்ந்த கண்ணதாசன்(26), செல்வபுரம் ராமமூர்த்தி ரோட்டை சேர்ந்த ராகுல் ராஜ்(27) ஆகிய 3 பேரை செல்வபுரம் போலீசார் கைது செய்தனர். 

பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து 150 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல், மதுக்கரை மார்க்கெட் ரோடு சுந்தராபுரம் ஜங்சன் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஈச்சனாரி அண்ணாநகரை சேர்ந்த ஹக்கீம்(37) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 300 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe