பைக்கில் வைத்திருந்த ரூ. 52 ஆயிரம் திருட்டு

published 1 year ago

பைக்கில் வைத்திருந்த ரூ. 52 ஆயிரம் திருட்டு

கோவை: கோவை சின்னவேடம்பட்டி விநாயகர் கோயில் தெருவை சேர்ந்தவர் கதிர்வேல்(46). கட்டிட தொழிலாளி. இவர் நேற்று பைக்கில் துடியலூர் ரோட்டில் உள்ள ஹார்டுவேர் கடைக்கு சென்றார். 

பின்னர் கடை முன்பு பைக்கை நிறுத்தி விட்டு பெயிண்ட் வாங்க சென்றார். அப்போது அவர் பைக்கில் பேக்கை மறந்து வைத்து விட்டு சென்றதாக தெரிகிறது. அதில், ரூ. 52,500 இருந்தது. பின்னர் அவர் திரும்பி வந்து பார்த்தபோது பேக்கை காணவில்லை. 

மர்ம நபர் பணத்துடன் பேக்கை திருடி சென்றுவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த கதிர்வேல் இது குறித்து சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். 

அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி பணம் திருடிய நபரை தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe