ராஜஸ்தானில் அதிகாலையில் நிலநடுக்கம் - பொதுமக்கள் அதிர்ச்சி!

published 1 year ago

ராஜஸ்தானில் அதிகாலையில் நிலநடுக்கம் - பொதுமக்கள் அதிர்ச்சி!

ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் உள்ளிட்ட நகரங்களில் இன்று அதிகாலை நிலநடுக்கம் உணரப்பட்டது. சில வினாடிகள் மட்டுமே நீடித்த இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்க. ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த பொதுமக்கள் நிலநடுக்கத்தால் அதிர்ச்சி அடைந்து வீடுகளை விட்டு வெளியே வந்தனர். 

அத்துடன் 30 நிமிட இடைவெளியில் 3 முறை அடுத்தடுத்து இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.

ராஜஸ்தானில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 4.4 அலகுகளாக பதிவாகி இருந்தது.

இதே போல மணிப்பூர் மாநிலம் உக்ருல் மாவட்டத்திலும் இன்று அதிகாலை நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டரில் 3.3 ஆக பதிவாகி இருந்தது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe