உஷார்.. கோவையில் மொபட் மீது ஆட்டோவை மோதி பெண்ணிடம் பணம் பறிப்பு

published 1 year ago

உஷார்.. கோவையில் மொபட் மீது ஆட்டோவை மோதி பெண்ணிடம் பணம் பறிப்பு

கோவை:  கோவையில் மொபட் மீது ஆட்டோவை மோதி பெண்ணிடம் பணம் பறிப்பில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை சிங்காநல்லூர் உப்பிலிபாளையம் ஜோதி நகரை சேர்ந்தவர் பால்ராஜ் மனைவி புஷ்பா(47). கூலி தொழிலாளி. இவர் நேற்று தனது மகளுடன் மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள பேக்கரி அருகே சென்று கொண்டிருந்த போது பின்தொடர்ந்து வந்த ஆட்டோ மொபட் மீது மோதியது.

இதில் நிலைதடுமாறி புஷ்பாவும், அவரது மகளும் கீழே விழுந்தனர். அப்போது ஆட்டோவில் இருந்த 4 பேரில் ஒருவர் கீழே இறங்கி வந்து புஷ்பாவின் கைப்பையை பறித்து கொண்டு ஆட்டோவில் தப்பினர்.

கீழே விழுந்ததில் லேசான காயமடைந்த தாயையும், மகளையும் அந்த வழியாக சென்றவர்கள் மீட்டனர். இதற்கிடையே பணம் அதிகம் இருக்கும் என கைப்பையை பறித்த கும்பல் அதில் ரூ. 500 மட்டும் இருந்ததால் ஏமாற்றமடைந்து பணத்தை எடுத்து விட்டு சிறிது தூரத்தில் கைப்பையை தூக்கி எறிந்து விட்டு சென்றுள்ளனர்.

இது குறித்து புஷ்பா சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி மொபட் மீது ஆட்டோவை மோத வைத்து பணம் பறித்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe