ஆன்லைன் மூலம் வைப்புத் தொகை செலுத்துவதில் சிக்கல்

published 1 year ago

ஆன்லைன் மூலம் வைப்புத் தொகை செலுத்துவதில் சிக்கல்

கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சியில் ஒப்பந்ததாரர்கள் பணி தொடங்கும் முன்1 சதவீதத்தை வைப்புத் தொகையாக வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒப்பந்த நிறுவனங்கள் தங்கள் பணத்தை திரும்பப் பெறும்.டெண்டர் கிடைக்காவிட்டால் டெண்டர் கேட்டு விண்ணப்பித்த ஒப்பந்த நிறுவனங்களுக்கு உடனடியாக இந்த வைப்பு தொகை வழங்கப்பட வேண்டும்.ஒப்பந்த பணிக்கு விண்ணப்பிக்கும் நிறுவனங்கள் வைப்பு தொகையை காசோலையாக மாநகராட்சி அலுவலகங்களில் செலுத்தி வந்தது.

இந்த நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டு மின்னணு முறையில் செலுத்த வேண்டும் என்ற தற்போது உத்தரவு வெளியாகியுள்ளது. கடந்த காலங்களில் மின்னணு முறையில் வைப்பு தொகை செலுத்திய ஒப்பந்த நிறுவனங்களுக்கு வைப்பு தொகை திரும்ப முறையாக  வழங்கப்படவில்லை. வைப்பு தொகை கேட்டு ஒப்பந்த நிறுவனங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.  எனவே, இந்த சூழ்நிலையில், கடந்த காலங்களில் கடைபிடிக்கப்பட்ட அதாவது காசோலையாக மாநகராட்சி அலுவலகங்களில் வைப்பு தொகை செலுத்தும் முறையை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்.

ஆன்லைன் மூலமாக வைப்பு தொகையை செலுத்தினால் அந்த தொகை ஒப்பந்த நிறுவனங்களுக்கு உரிய முறையில் திரும்ப கிடைப்பதில்லை. காசோலையாக செலுத்தினால் அந்த தொகையை திரும்ப பெற முடியும் என ஒப்பந்த நிறுவனத்தினர் தெரிவித்தனர். மேலும் கோவை மாநகராட்சி நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அரசிடம் இந்த கோரிக்கையை வலியுறுத்த திட்டமிட்டுள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe