டிபன் கடைக்காரரை மிரட்டி பணம் பறித்த சிறுவர்கள்: 4 பேர் கைது

published 1 year ago

டிபன் கடைக்காரரை மிரட்டி பணம் பறித்த சிறுவர்கள்: 4 பேர் கைது

கோவை : கோவையில் டிபன் கடைக்காரரை மிரட்டி பணம் பறித்த சிறுவர்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். கோவை கணபதி ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் மூர்த்தி(51). இவர் சத்தி - விளாங்குறிச்சி ரோட்டில் டிபன் கடை நடத்தி வருகிறார். 

நேற்று முன்தினம் இரவு இவர் வழக்கம்போல வியாபாரத்தைக் கவனித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 4 பேர் சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்காமல் தகராறு செய்தனர். பின்னர் அவர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி மூர்த்தியிடம் ரூ. 500 பறித்து விட்டு மிரட்டி சென்றனர்.

 உடனே அவர் இது குறித்து சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில், டிபன் கடைக்காரரிடம் கத்தி முனையில் பணம் பறித்தது கணபதி மூர் மார்க்கெட்டை சேர்ந்த விக்கி(எ) விக்னேஷ்(18), 16 மற்றும் 17 வயதுடைய 3 சிறுவர்கள் என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவர்களைக் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைத்தனர்.


 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe