கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4 பேர் : போலீசார் கைது

published 1 year ago

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4 பேர் : போலீசார் கைது

கோவை: கோவையில் போதை மாத்திரை, கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.கோவையில் போதைப் பொருள் நடமாட்டத்தை ஒழிக்க போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், சவுரிபாளையம் உடையாம்பாளையம் ரோட்டில் உள்ள சுடுகாடு அருகே வாலிபர் ஒருவர் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபடுவதாக பீளமேடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த வாலிபர் ஒருவரைப் பிடித்து விசாரித்தனர். அதில், அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்தார். அவரிடம் சோதனை செய்தபோது அவர் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனைதொடர்ந்து போலீசார் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட இருகூர் ஏஜி புதூர் ரோட்டை சேர்ந்த பிரவீன்(22) என்பவரைக் கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 போதை மாத்திரை பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதேபோல், கடைவீதி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எல்ஜி தோட்டத்தில் உள்ள பொதுக்கழிப்பிடம் அருகே சிலர் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த கெம்பட்டி காலணியைச் சேர்ந்த மனோஜ்குமார்(26), தர்மலிங்கம்(19) ஆகிய இருவரைக் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 120 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல், கோணவாய்க்கால்பாளையம் கக்கன் நகர் ரோட்டில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வெள்ளலூர் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த தொழிலாளி சதாம் உசேன்(21) என்பவரை போத்தனூர் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
 


 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe