கோவையில் தன்னுடன் பேச மறுத்ததால் காதலியைத் தாக்கிய வாலிபர் கைது..!

published 1 year ago

கோவையில்  தன்னுடன் பேச மறுத்ததால் காதலியைத் தாக்கிய வாலிபர் கைது..!

கோவை:  கோவையில் பேச மறுத்த ஆத்திரத்தில் கல்லூரி மாணவியைத் தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் 19 வயது மாணவி. இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் 3ம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 4 ஆண்டுகளாக குனியமுத்தூரைச் சேர்ந்த சஞ்சய்(19) என்பவர் மாணவியைக் காதலித்து வந்தார். ஆனால் அவரது நடவடிக்கை பிடிக்காத காரணத்தால் கல்லூரி மாணவி சில மாதங்களாக சஞ்சயுடன் பேசுவதையும், பழகுவதையும் தவிர்த்தார். 

இதனால் ஆத்திரத்தில் இருந்து வந்த சஞ்சய் நேற்று குனியமுத்தூர் ரோட்டில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்குக் கல்லூரி முடிந்து மாணவி வீட்டுக்குச் செல்வதற்காக நடந்து சென்று கொண்டிருந்தார். அவரை சஞ்சய் வழிமறித்து தகராறு செய்தார்.

 அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த சஞ்சய் தகாத வார்த்தைகளால் பேசி மாணவியைத் தாக்கினார். பின்னர் அவரை மிரட்டி விட்டுச் சென்றார். இது குறித்து மாணவி குனியமுத்தூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து சஞ்சயைக் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe