போத்தனூரில் இரண்டு வயது பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை

published 1 year ago

போத்தனூரில் இரண்டு வயது பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை

கோவை: இரண்டு வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.

போத்தனூரை சேர்ந்தவர் 29 வயது இளைஞர். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

இதனிடையே நேற்று பெண் குழந்தையின் பிறப்புறுப்பில் ரத்தம் கசிவதை அவரது தாய் பார்த்துள்ளார். தொடர்ந்து அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டது தெரியவந்தது.

இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் குழந்தையின் தந்தையே குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்தது தெரியவந்தது.

இதனை அடுத்து பெற்ற குழந்தையையே பாலியல் வன்கொடுமை செய்த தந்தையை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe