கோவையில் வீட்டின் முன்  கோலம் போட்டுக் கொண்டிருந்த பெண்ணிடம் நூதன முறையில் 2 பவுன் நகை பறிப்பு

published 1 year ago

கோவையில் வீட்டின் முன்  கோலம் போட்டுக் கொண்டிருந்த பெண்ணிடம் நூதன முறையில் 2 பவுன் நகை பறிப்பு

கோவை: கோவையில் மயங்கி விழுவது போல நடித்து வீட்டு முன்பு கோலம் போட்டு கொண்டிருந்த பெண்ணிடம் 2 பவுன் நகை பறித்துத் தப்பிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை சிங்காநல்லூர் நேதாஜி புரத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர் மனைவி சத்யபாமா(46). இவர் நேற்று காலை வீட்டு முன்பு கோலம் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஆண் ஒருவர் திடீரென மயக்கம் போட்டு விழுந்தார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சத்யபாமா அவரை தூக்கி விட்டு என்ன என்று கேட்டார். 

அதற்கு அவர் தலை சுற்றுவது போல் உள்ளது எனத் தெரிவித்துள்ளார். பின்னர் அந்த நபர் அங்கிருந்து சென்று விட்டார். பின்னர் சத்யபாமா தனது கழுத்தைப் பார்த்தபோது 2 பவுன் தங்க செயின் மாயமாகி இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். அவர் மயங்கி விழுந்த அந்த நபருக்கு உதவி செய்த போது நைசாக நகையைப் பறித்து விட்டு அந்த மர்ம நபர் தப்பிச் சென்றுள்ளார். இது குறித்து சத்யபாமா சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

 விசாரணையில், மயங்கி விழுவது போல் நடித்து பெண்ணிடம் நகை பறித்துச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளைக் கைப்பற்றி நூதன முறையில் நகை பறித்துச் சென்ற மர்ம நபரைத் தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe