சிங்காநல்லூரில் குடிபோதையில் ஓட்டல் மேலாளரை தாக்கிய கும்பல்

published 1 year ago

சிங்காநல்லூரில் குடிபோதையில் ஓட்டல் மேலாளரை தாக்கிய கும்பல்

கோவை: கோவை சிங்காநல்லூரில் குடிபோதையில் ஓட்டல் மேலாளரை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்தவர் பிரவீன்குமார் (25). இவர் ஒண்டிப்புதூரில் உள்ள ஒரு ஓட்டலில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று பிரவீன்குமார் ஓட்டலில் இருந்த போது, அங்கு குடிபோதையில் வந்த 3 பேர் தங்குவதற்கு அறை கேட்டனர். அதற்கு பிரவீன்குமார் ரூ.1,500 கொடுத்தால் அறை புக் செய்து கொடுப்பதாக தெரிவித்தார். ஆனால், 3 பேரும் பணம் கொடுக்க மறுத்து தகராறில் ஈடுபட்டனர். இதில், 3 பேரும் சேர்ந்து தகாத வார்த்தைகளால் பேசி பிரவீன்குமாரை தாக்கினர்.

இதுகுறித்து பிரவீன்குமார் சிங்காநல்லூர் போலீசில் அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து மேலாளரை தாக்கிய சிங்காநல்லூரை சேர்ந்த எலக்ட்ரீசியன் கார்த்திகேயன் (25), ஒண்டிப்புதூர் சாமியார் மேடையை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ரஞ்சித் குமார் (22) மற்றும் துடியலூரை சேர்ந்த கால் டாக்சி டிரைவர் கரண்குமார் (23) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

பின்னர் 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe