கோவையில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை

published 1 year ago

 கோவையில்  14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை

கோவை : கோவையில் புரோஜக்ட் திட்ட விழிப்புணர்வு மூலம் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அவரது சித்தப்பாவை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

கோவை மாவட்ட காவல் துறை சார்பில் சிறுமிகளை பாலியல் வன்முறைகளை இருந்து காக்க புரோஜக்ட் பள்ளிக்கூட திட்டத்தின் மூலம் விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது. போலீசார் பள்ளிகளுக்குச் சென்று மாணவிகளிடம் விழிப்புணர்வு செய்து வருகின்றனர். இந்நிலையில், கோவை துடியலூர் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த கொரோனா கால கட்டத்தில் சிறுமி வீட்டில் இருந்த போது அவரது சித்தப்பா சிறுமிக்கு செல்போனில் ஆபாச வீடியோ காட்டி அத்துமீறியுள்ளார். ஆனால் சிறுமி நடந்தது என்ன என்று தெரியாமலேயே இருந்துள்ளார். இதற்கிடையே சில நாட்களுக்கு முன்பு சிறுமி படிக்கும் பள்ளிக்கூடத்தில், புரோஜக்ட் பள்ளிக்கூட திட்டம் மூலம் போலீசார் விழிப்புணர்வு நடத்தினர். அதில் மாணவிகளிடம் குட் டச், பேட் டச் என்றால் என்ன? பாலியல் அத்துமீறலால் பாதிக்கப்பட்டால் தயங்காமல் புகார் அளிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர். அப்போதுதான் சிறுமிக்குத் தனது சித்தப்பா தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டது தெரியவந்தது. ஆனால் அந்த சிறுமி யாரிடமும் கூறாமல் இருந்துள்ளார். இதற்கிடையே சிறுமி கடந்த 28ம் தேதி தனது சகோதரியுடன் தனது பாட்டி வீட்டுக்குச் சென்றார். அதன் அருகே உள்ள சித்தப்பா வீட்டுக்குச் சென்ற போது அவர் மீண்டும் மாணவியைத் தகாத நோக்கத்தில் அணுகியுள்ளார். இதனைச் சிறுமி கண்டித்துள்ளார். மேலும் இது குறித்து துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில், போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சிறுமியிடம் அத்துமீறிய கூலித் தொழிலாளியான அவரது சித்தப்பாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe