கோவையில் ரூ.5 கோடி மதிப்பிலான தங்க கட்டிகள் மோசடி : கணவன் மனைவி கைது

published 1 year ago

கோவையில் ரூ.5 கோடி மதிப்பிலான தங்க கட்டிகள் மோசடி : கணவன் மனைவி கைது

கோவை: கோவை ஆர்.எஸ்.புரம் பாதர் ராண்டி வீதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார், 62. இவர் அதே பகுதியில் நகைக் கடை நடத்தி வருகிறார். மேலும் தங்கக் கட்டிகளை வியாபாரிகளிடம் இருந்து பெற்று அவற்றை நகைப்பட்டறையில் கொடுத்து, வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப ஆபரணமாக வடிவமைத்து விற்பனை செய்து வந்தார். 

அப்போது தெலுங்கு பாளையத்தைச் சேர்ந்த நகைப்பட்டறை உரிமையாளர் விஜய் வெங்கடேஷ் மற்றும் அவரது மனைவி நித்யா சம்பத்குமார் ஆகியோர் ஜெயக்குமாருக்கு அறிமுகமானார்கள். அவர்களிடம் கடந்த, 5 வருடங்களாகத் தங்கக் கட்டிகளைக் கொடுத்து ஆபரணம் செய்து வந்தார். கடந்த, ஜூலை மாதம் அவர்களிடம்  ரூ.5 கோடி மதிப்புள்ள,  8,988 கிராம் தங்கக் கட்டிகளைக் கொடுத்து ஆபரணமாகச் செய்து தரும்படி ஜெயக்குமார் கூறினார். 

ஆனால் அவர்கள் தங்கக் கட்டிகளை ஆபரணமாகச் செய்து தராமல் இருந்து வந்தனர். சந்தேகம் அடைந்த ஜெயக்குமார், அவர்களிடம் கேட்டார். அதற்கு அவர்கள் முன்னுக்குப்பின் முரணாகப் பதில் அளித்தனர். தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ஜெயக்குமார் இதுகுறித்து ஆர்.எஸ்.,புரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் படி காவல்துறை கணவன், மனைவி இருவரையும் கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe