கோவை ரயில் நிலையம் அருகே தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட வடமாநில வாலிபர்

published 1 year ago

கோவை ரயில் நிலையம் அருகே தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட வடமாநில வாலிபர்

கோவை  : கோவை ரயில் நிலையம் பின்புறம் கடந்த 28ம் தேதி வாலிபர் ஒருவர் தீக்காயங்களுடன் வலியால் துடித்துக் கொண்டிருந்தார். இதனைப்பார்த்த அந்த வழியாகச் சென்றவர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து உக்கடம் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். 

அதில், அவர் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தினேஷ்குமார் சிராஜ்(39) என்பது மட்டும் தெரியவந்துள்ளது. அவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு காரணமா என காவல்துறை விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe