வாலாங்குளம் அருகே விபசாரத்தில் ஈடுபட்ட பெண் மீட்பு

published 1 year ago

வாலாங்குளம் அருகே விபசாரத்தில் ஈடுபட்ட பெண் மீட்பு

கோவை : கோவை செட்டி தெருவைச் சேர்ந்த 49 வயது நபர். இவர் நேற்று வாலாங்குளம் குழந்தைகள் பூங்கா அருகே நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு வாலிபர், என்னிடம் அழகான இளம்பெண்கள் உள்ளனர். 

நீங்கள் பணம் கொடுத்தால் அவர்களிடம் உல்லாசம் அனுபவிக்கலாம் என அழைப்பு விடுத்தார். இது குறித்து அவர் ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் விசாரணை நடத்தி சோதனை செய்தனர். 

அதில், அங்குள்ள வீட்டில் இளம்பெண்களை வைத்து விபசாரம் நடத்தியது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் சென்னை சிட்லபாக்கத்தை சேர்ந்த 32 வயது பெண்ணை மீட்டு ஒண்டிப்புதூரில் உள்ள காப்பகத்தில் சேர்த்தனர். மேலும் தலைமறைவான விபசார புரோக்கர் முத்து(எ) முத்துக்குமாரை தேடி வருகின்றனர்.


 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe