கோவையில் தனியார் மாலில் ரூ.5½ லட்சம் மோசடி கணக்காளர் கைது

published 2 years ago

கோவையில் தனியார் மாலில் ரூ.5½ லட்சம் மோசடி கணக்காளர் கைது

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் :

https://chat.whatsapp.com/FePOfH8LTBKE40nzrfPpnD

கோவை, ஜூன்.11- கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் தனியார் மால் செயல்பட்டு வருகிறது. இந்த மாலின் வளாகத்தில் தனியார் நிறுவனத்தினர் சார்பில் உணவு மையம் உள்ளது. இங்குக் கடந்த சில மாதங்களாக செல்வபுரம் எல்.ஐ.சி காலனியை சேர்ந்த பாலாஜி செல்வராஜ் (வயது 32) என்பவர் கணக்காளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், அங்கு நடைபெறும் கணக்கு வரவு, செலவுகளை நிறுவனத்தினர் ஆய்வு செய்தனர்.

அப்போது அங்கு மோசடி செய்திருப்பது தெரியவந்தது. கடந்த மார்ச் 1-ந் தேதி முதல் ஏப்ரல் 1-ந் தேதி வரை ரூ.5 லட்சத்து 56 ஆயிரத்து 289 மோசடி செய்திருப்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் நடத்திய விசாரணையில், அங்குக் கணக்காளராக பணியாற்றிய பாலாஜி செல்வராஜ் உரியக் கணக்கைக் காட்டாமல் கணக்கை மறைத்து மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து அவரிடம் கேட்டபோது அவர் பணத்தைத் திருப்பி கொடுத்து விடுவதாகத் தெரிவித்துள்ளார். ஆனால் நீண்ட நாட்களாகியும் அவர் பணத்தைக் கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார். இதனால் நிர்வாகத்தினர் இது குறித்து ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில், போலீசார்  வழக்குப்பதிவு செய்து பாலாஜி செல்வராஜை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe