கோவை சரக புதிய டிஐஜி பொறுப்பேற்பு

published 1 year ago

கோவை சரக புதிய டிஐஜி பொறுப்பேற்பு

கோவை : திருச்சி சரக டிஐஜி ஆக பணியாற்றி வந்த சரவண சுந்தர் இன்று காலை கோவை சரக டிஐஜி-யாக பொறுப்பேற்றுக் கொண்டார். 

கோவை சரக டி.ஐ.ஜி யாக பணியாற்றி வந்தவர் விஜயகுமார். இவர் கடந்த மாதம் 7ம் தேதி ரேஸ்கோர்சில் உள்ள முகாம் அலுவலகத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். 

காலியாக உள்ள அவரது இடத்திற்குத் திருச்சி சரக டிஐஜி யாக பணியாற்றி வந்த சரவண சுந்தர் நியமிக்கப்பட்டார். அவர் இன்று ரேஸ் கோர்சில் உள்ள அலுவலகத்தில் டிஐஜி-யாக பொறுப்பேற்றுக் கொண்டார். புதியதாகப் பொறுப்பேற்றுக் கொண்ட டி.ஐ.ஜி சரவண சுந்தருக்கு காவல்துறை அதிகாரிகள், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் காவலர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe