கோவையில் பெண்ணிடம் 5 1/2 பவுன் நகை மர்ம நபர்களால் பறிப்பு

published 1 year ago

கோவையில் பெண்ணிடம் 5 1/2 பவுன் நகை மர்ம நபர்களால் பறிப்பு

கோவை : கோவை ஒண்டிப்புதூரை சேர்ந்தவர் சார்லி ஜோசப். இவரது மனைவி தனசீலி(55). இவர் நேற்று காலை வீட்டு முன்பு கோலம் போட்டு கொண்டிருந்தார். 

அப்போது அங்கு பைக்கில் வந்த மர்ம நபர் திடீரென தனசீலி கழுத்தில் கிடந்த 5 1/2 பவுன் தங்க செயினை பறித்து கொண்டு பைக்கில் தப்பினார். இதனால் அதிர்ச்சியடைந்த தனசீலி இது குறித்து சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார். 

புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறித்து சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe