ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையில் விவசாயிகளுக்கு கடை ஒதுக்கீடு செய்ய புகார் மனு

published 1 year ago

ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையில் விவசாயிகளுக்கு  கடை ஒதுக்கீடு செய்ய புகார் மனு

கோவை: கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடியிடம் சர்க்கார் சாமக்குளம் வட்டார விவசாயிகள்  மனு அளித்தனர். பின்னர் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோவை ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையில் விவசாயிகளுக்கு உரியக் கடை ஒதுக்கீடு செய்யப்படுவதில்லை. 

எம்.ஜி.ஆர்.மார்க்கெட், பூளுவப்பட்டி மார்க்கெட், தொண்டாமுத்தூர் மார்க்கெட் ஆகிய மார்க்கெட்டுகளில் இருந்து காய்கறிகள் விலைக்கு வாங்கி அதிக அளவில் விற்பனை செய்யும் அட்டைதாரர்களுக்கு நிரந்தர கடை ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இது போன்று பல முறைகேடுகள் அங்கு நடக்கின்றன. விவசாயிகள் என்கிற போர்வையில் வியாபாரிகளுக்குக் கடைகள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன," என்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe