கோவையில் மனைவியை தலையணையால் அழுத்தி கொலை செய்துவிட்டு கணவன் தற்கொலை

published 1 year ago

கோவையில் மனைவியை தலையணையால் அழுத்தி கொலை செய்துவிட்டு கணவன் தற்கொலை

கோவை: கோவையில் குடும்ப தகராறில் மனைவியைத் தலையணையால் அழுத்தி மூச்சு திணறடித்து கொலை செய்துவிட்டு கணவனும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் ஊத்துக்குளி அருகே உள்ள சென்னியப்பன் பிள்ளை தோட்டத்தைச் சேர்ந்தவர் காளிமுத்து (வயது 65). இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 60). இவர்கள் இரண்டு பேரும் தோட்டத்தில் தங்கியிருந்து கூலி வேலை செய்து வருகின்றனர்.

இவர்களது மகள் கவிதாமணி திருமணமாகி கணவருடன் கோவையில் வசித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த 9 மாதங்களுக்கு முன்பு காளிமுத்து அவரது மனைவி ராஜேஸ்வரி ஆகியோருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. 

இதனையடுத்து ராஜேஸ்வரி தனது கணவரைப் பிரிந்து கோவையில் உள்ள மகள் வீட்டில் வசித்து வந்தார். மேலும் , அந்த பகுதியில் உள்ள தனியார்ப் பள்ளியில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார்.  நேற்று மதியம் காளிமுத்து கோவையில் உள்ள மகள் வீட்டிற்குச் சென்றார். அங்கிருந்து ராஜேஸ்வரியை அவர் சமாதானம் செய்து தோட்டத்திற்கு அழைத்துச் சென்றார். 

நேற்று மாலை 4 மணி அளவில் மீண்டும் கணவன் மனைவிக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதுகுறித்து ராஜேஸ்வரி பொள்ளாச்சி தாலுகா போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் காளிமுத்துவை அழைத்து சமாதனம் செய்து அவரது மனைவியை அவருடன் அனுப்பி வைத்தனர். இரண்டு பேரும் வீட்டிற்குப் புறப்பட்டுச் சென்றனர். 

இரவு 9 மணியளவில் மீண்டும் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வாக்குவாதமாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த காளிமுத்து அங்கிருந்து தலையணையால் ராஜேஸ்வரியின் முகத்தில் அழுத்தி மூச்சு திணறடித்து கொலை செய்தார். பின்னர் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இன்று காலை  இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து பொள்ளாச்சி  மேற்கு போலீசாருக்கு தகவல் அளித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கணவன் மனைவி இருவரது உடலையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்குப் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பொள்ளாச்சி மேற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடும்ப பிரச்சனையில் மனைவியைக் கொன்று கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe