பாரதியார் பல்கலையில் முனைவர் பட்டம் பெற்ற ஹிப் ஹாப் தமிழா... மியூசிக் அகாடமி தொடங்குவதாக பேட்டி

published 1 year ago

பாரதியார் பல்கலையில் முனைவர் பட்டம் பெற்ற ஹிப் ஹாப் தமிழா... மியூசிக் அகாடமி தொடங்குவதாக பேட்டி

கோவை: மியூசிக் அகாடமி ஆரம்பிக்கும் திட்டம் இருப்பதாகவும், அதற்காகவே முனைவர் பட்டம் முடித்திருப்பதாகவும் ஹிப் ஹாப் ஆதி பேட்டியளித்துள்ளார்.

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் 38வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெறுகிறது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு பட்டங்களை  வழங்குகிறார். இதில் திரைப்பட இசையமைப்பாளரும், நடிகருமான  ஹிப்ஹாப் ஆதி யும் முனைவர் பட்டம் பெறுகிறார்.

இந்நிகழ்வில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஹிப் ஹாப் ஆதி கூறியதாவது:

இசை தொடர்பாக ஐந்தாண்டு ஆராய்ச்சி செய்து வந்தேன். இப்போது அது நிறைவடைந்துள்ளது. முனைவர் பட்டம் வாங்குவது மகிழ்ச்சியாக இருக்கிறது. வேறு  வேலை பார்த்துக்கொண்டே படிப்பது கடினமாக இருந்தது. அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களில் புதிய படம் வெளியாகும். என்றார்.

தமிழர் நலனுக்கு எதிராக இருக்கும் ஆளுநரிடம் பட்டம் வாங்குவதாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு "முனைவர் பட்டத்தை கவர்னரிடம் தான் வாங்க வேண்டும். அதற்கு வேறு மாற்று இல்லை. மேலும்  சந்திராயன் 3 இந்தியாவிற்கே பெருமை சேர்க்கும் விதமாக இருக்கின்றது. மியூசிக் அகாடமி ஆரமிக்கும் எண்ணம்  இருக்கிறது. அதற்கு முன்னோட்டமாகவே முனைவர் படிப்பு முடித்துள்ளேன். என்றார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe