காந்திபுரத்தில் வாலிபரை மிரட்டி கத்திமுனையில் பணம் பறிப்பு

published 1 year ago

காந்திபுரத்தில் வாலிபரை மிரட்டி கத்திமுனையில் பணம் பறிப்பு

கோவை : கோவை காந்திபுரத்தில் வாலிபரை மிரட்டி கத்திமுனையில் பணம் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.புதுக்கோட்டை விராலி மலையைச் சேர்ந்தவர் பால சுப்பிரமணி(21). இவர் கோவையில் தங்கிக் கட்டிட வேலை செய்து வந்தார். இந்நிலையில், நேற்று இரவு பால சுப்பிரமணி காந்திபுரம் 4வது வீதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். 

அப்போது அவரை வழிமறித்த 2 வாலிபர்கள் அவரிடம் பணம் கேட்டு மிரட்டினர். அவர் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த 2 பேரும் பாலசுப்பிரமணி கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி பாக்கெட்டில் இருந்த ரூ. 700 ஐ பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இது குறித்து பால சுப்பிரமணி காட்டூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். 

அதில், கத்திமுனையில் மிரட்டி பணம் பறித்தது கோவை சுகுணாபுரம் மைல்கல்லைச் சேர்ந்த தொழிலாளி அரத் நிசார்(27) மற்றும் கோவைப்புதூர் அய்யப்பன் கோயில் தெருவைச் சேர்ந்த சுதிர் குமார்(31) என்பது தெரியவந்தது. போலீசார் இருவரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து 2 கத்தி, ரூ. 700 பறிமுதல் செய்யப்பட்டது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe