கோவையில் மூதாட்டி உட்பட 2 பேரிடம் 7 பவுன் நகை பறிப்பு

published 1 year ago

கோவையில் மூதாட்டி உட்பட 2 பேரிடம் 7 பவுன் நகை பறிப்பு

கோவை : கோவை ரத்தினபுரி சாதிக்பாஷா தெருவைச் சேர்ந்தவர் கமலம்(73). இவர் நேற்று தண்டு மாரியம்மன் கோயிலுக்குச் சென்றார். அங்கு அவர் கோயில் முன்பு கற்பூரம் ஏற்றிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 பேர் திடீரென மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க செயினை பறித்தனர். 

இதனால் அதிர்ச்சியடைந்த மூதாட்டி திருடன், திருடன் எனக் கூச்சல் போட்டார். அக்கம்பக்கத்தினர் ஓடி வருவதற்குள் நகை பறித்த 2 பேரும் கோயிலுக்குச் சற்று தொலைவில் நிறுத்தியிருந்த பைக்கில் தப்பிச் சென்றனர். இது குறித்து கமலம் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியிடம் நகை பறித்த பைக் ஆசாமிகளைத் தேடி வருகின்றனர்.

கோவை டாடாபாத் 9வது வீதியைச் சேர்ந்தவர் ஜானகி(50). இவர் நேற்று வீட்டு முன்பு சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த 2 பேர் ஜானகியிடம் ஒரு இடத்தை குறிப்பிட்டு முகவரி கேட்டனர். அவர் சொல்லிக்கொண்டிருக்கும் போது திடீரென 2 பேரும் அவரது கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்கத் தாலியைப் பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் பைக்கில் தப்பினர். இதனால் அதிர்ச்சியடைந்த ஜானகி இது குறித்து ரத்தினபுரி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைபறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களைத் தேடி வருகின்றன

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe