கோவையில் திருடனை மடக்கிப் பிடித்த பெண்..!

published 2 years ago

கோவையில் திருடனை மடக்கிப் பிடித்த பெண்..!

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் : https://chat.whatsapp.com/Gymsw6mPrOK0fU2lrUKwUs

கோவை: கோவை வ.உ.சி மைதானம் அருகே பெண் ஒருவர் பானிபூரி கடை வைத்து நடத்தி வருகிறார். அவர் இன்று காலை வழக்கம்போல கடையை  திறப்பதற்காக  மெபட்டில் வ.உ.சி வந்தார்.

பின்னர் தனது மெபட்டை கடையின் அருகே நிறுத்தி கடையை திறந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் அந்தப்பெண் அசந்த நேரம் பார்த்து மெபட்டை மெதுவாக திருடிக்கண்டு அங்கிருந்து செல்ல முயற்சி செய்தார். 
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண் அந்த திருடனை மடக்கி பிடித்து சத்தம் போட்டார். அவரின் சத்தத்தைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் அந்த வாலிபரை பிடித்து வைத்து ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த வாலிபரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர்.

இதையடுத்து போலீசார் அந்த வாலிபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe