அரசு வேலை வாங்கித்தருவதாக ரூ.15 லட்சம் மோசடி : 2 பெண்கள் உட்பட 5 பேர் மீது வழக்கு

published 1 year ago

அரசு வேலை வாங்கித்தருவதாக ரூ.15 லட்சம் மோசடி : 2 பெண்கள் உட்பட 5 பேர் மீது வழக்கு

அரசு வேலை வாங்கித்தருவதாக ரூ.15 லட்சம் மோசடி : 2 பெண்கள் உட்பட 5 பேர் மீது வழக்கு

கோவை: தேனியை சேர்ந்தவருக்கு வேலை வாங்கி தருவதாக ரூ. 15 லட்சம் மோசடி செய்ததாக கோவையில் 2 பெண்கள் உட்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் டி.கல்லிப்பட்டியை சேர்ந்தவர் ஆனந்தன்(67). இவர் தேனி பஸ் ஸ்டாண்டில் தற்காலிக நேர காப்பாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகனுக்கு வேலை வாங்கி தருவதற்காக முயற்சி செய்து கொண்டிருந்தார்.

அப்போது அவருக்கு கோவை குனியமுத்தூரை சேர்ந்த பாக்கியராஜ், தெரசா, கிருஷ்ண லதா, ராஜசேகர், ஆறுமுகம் ஆகியோர் அறிமுகம் ஆகினர். இவர்கள் ஆனந்தனிடம் உங்களது மகனுக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறியதாக தெரிகிறது. அதற்கு சிலரிடம் பணம் கொடுக்கவேண்டும் என்று கூறியுள்ளனர். இதனை நம்பிய ஆனந்தன் கடந்த 2020ம் ஆண்டு பல்வேறு கட்டங்களாக ரூ. 15 லட்சம் கொடுத்ததாக தெரிகிறது.

ஆனால் பணத்தை பெற்று கொண்ட அவர்கள் ஆனந்தனின் மகனுக்கு வேலை வாங்கி தரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த ஆனந்தன் அவர்களிடம் கேட்டபோது பணத்தை திருப்பி கொடுக்காமல் மிரட்டல் விடுத்துள்ளனர்.

இந்த மோசடி குறித்து ஆனந்தன் கோவை குனியமுத்தூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் நம்பிக்கை மோசடி, மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் கோவையை சேர்ந்த பாக்கியராஜ், தெரசா, கிருஷ்ணலதா, ராஜசேகர், ஆறுமுகம் ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe