பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

published 1 year ago

பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

கோவை: பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளை மின் வாரியம் அறிவித்துள்ளது.

மாதாந்திர மின் பராமரிப்பு பணிகளுக்காக கோவையில் பல்வேறு பகுதிகளில் ஒரு நாள் மின் தடை அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி பொள்ளாச்சியில் நாளை (செப் 6ம் தேதி) மின் தடை ஏற்படும் பகுதிகளை மின் வாரியம் அறிவித்துள்ளது.

மின் தடை ஏற்படும் நேரத்தில் பொதுமக்கள் மின் ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் ஒத்துழைப்பு வழங்குமாறும் மின் வாரியம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மில்கோவில்பாளையம் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

மில்கோவில்பாளையம், காளியண்ணன்புதூர், சந்தேகவுண்டன்பாளையம், குள்ளிசெட்டிபாளையம். கக்கடவு, சோழனூர், செங்குட்டைபாளையம், மேட்டுப்பாளையம், சூலக்கல், தேவராயபுரம், சென்னியூர், வடக்கிபாளையம், ஆதியூர், ஜமீன் காளியாபுரம், பெரும்பதி.

தேவணாம்பாளையம் துணைமின்நிலையம்மாலை 3:00 முதல் மாலை 5:00 மணி வரை

தேவணாம்பாளையம் மின்பாதையில், தேவணாம்பாளையம், குளத்துப்பாளையத்தில் சில பகுதிகள். கப்பளாங்கரையில் சில பகுதிகள், கோப்பனூர்புதூர் ஒரு பகுதி.

தகவல்: சங்கர், செயற்பொறியாளர், நெகமம்.


Power cut areas in Coimbatore | power shutdown notification for Coimbatore

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe