கோவையில் விடுதி வார்டனுக்கு அடி உதை

published 1 year ago

கோவையில் விடுதி வார்டனுக்கு அடி உதை

கோவை, : கோவை ஆர்.எஸ் புரம் பகுதியில் தனியார் பெண் விடுதி உள்ளது.‌இந்த விடுதியின் வார்டன் ராஜா(48). விடுதியில், தீபிகா என்பவர் தங்கி வேலைக்கு சென்று வந்துள்ளார். அவரின் நடவடிக்கை சரியில்லாத காரணத்தால் ராஜா விடுதியை காலி செய்து விட்டு செல்ல கூறியுள்ளார்.

 இதனால் ஆத்திரமடைந்த தீபிகா தனது நண்பர்களான கணேசராஜா, சூர்யா உள்ளிட்ட 3 பேரிடம் வார்டன் குறித்து கூறியுள்ளார். இதையடுத்து, விடுதிக்கு வந்த தீபிகாவின் நண்பர்கள் 3 பேரும் வார்டன் ராஜாவை சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பித்து சென்றனர். 

இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ஆர்எஸ்புரம் போலீசார் விடுதி வார்டனை தாக்கிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe