கோவையில் மசாஜ் சென்டரில் விபச்சாரம்

published 1 year ago

கோவையில் மசாஜ் சென்டரில் விபச்சாரம்

கோவை :கோவையில் உள்ள ஒரு சில மசாஜ் சென்டர்களில் இளம்பெண்களை வைத்து விபசாரம் நடைபெற்று வருவதாக போலீசாருக்கு அடிக்கடி புகார்கள் வருகின்றன. இந்த நிலையில், விகேகே மேனன் ரோட்டில் உள்ள மசாஜ் சென்டரில் பெண்களை வைத்து விபசாரம் நடைபெறுவதாக காட்டூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி நேற்று போலீசார் அங்கு சென்று ரகசியமாக கண்காணித்தனர். 

அதில், அந்த மசாஜ் சென்டரில் இளம்பெண்களை வைத்து விபசாரம் நடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபசாரம் நடத்தி வந்த புரோக்கர் கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த சிபின்(32) என்பவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe