காளப்பட்டியில் வடமாநில தொழிலாளிக்கு கத்திக்குத்து

published 1 year ago

காளப்பட்டியில் வடமாநில தொழிலாளிக்கு கத்திக்குத்து

கோவை : பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் கொலுகுமார்(19). இவர் கோவை காளப்பட்டியில் தங்கி அங்குள்ள பிளாஸ்டிக் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், நேற்று கொலுகுமார் கம்பெனியில் இரவு பணியில் இருந்தார். அப்போது அதே கம்பெனியில் வேலை பார்க்கும் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த சீனு(23) என்பவருக்கும், கொலு குமாருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. 

இதில் ஆத்திரமடைந்த சீனு காய்கறி நறுக்கும் கத்தியால் கொலுகுமாரை குத்தினார். இதில் காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்த புகாரின் பேரில், பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், முன் விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடைபெற்றது தெரியவந்தது. 

இதனை தொடர்ந்து போலீசார் வடமாநில தொழிலாளியை கத்தியால் குத்திய சீனுவை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe