சூலூரில் பாஜக அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல்- 100க்கும் மேற்பட்டோர் கைது…

published 1 year ago

சூலூரில் பாஜக அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல்- 100க்கும் மேற்பட்டோர் கைது…

கோவை: விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவில்லை என கூறியும், வேலை வாய்ப்பை உருவாக்கவில்லை என்றும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் கடந்த 12 ஆம் தேதி முதல்  தொடர் மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் அறிவித்திருந்தனர். அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் சூலூர்  திருச்சி சாலையில் இந்திய கம்யூனிஸ்ட்   கட்சியினர் 100-க்கும் மேற்பட்டோர் இன்று திரண்டனர். 

 

பின்னர் ஊர்வலமாக வந்து கலங்கல் சாலை சந்திப்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆர்ப்பாட்டக்காரர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அவர்கள் திருச்சி சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறியதாக கூறி மத்திய அரசை கண்டித்து பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டது.

 

இதனை அடுத்து 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரின் மறியல் போராட்டம் காரணமாக திருச்சி சாலையில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe