கோவா சென்று கொடி நாட்டி வந்த கோவை வீரர்கள்..!

published 1 year ago

கோவா சென்று கொடி நாட்டி வந்த கோவை வீரர்கள்..!

கோவா மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில்  கலந்து கொண்டு 12 தங்கம் வென்ற வீரர்களுக்கு  கோவை ரயில் நிலையம் பகுதியி்ல் உற்ச்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது

 

கோவா மாநிலத்தில் கடந்த 11ம் தேதி தேசிய அளவிலான சிலம்பம் போட்டிகள் நடைபெற்றது, இதில், தமிழ்நாடு,ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, உத்திரபிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 500க்கும் மேற்பட்டோர்  கலந்துகொண்டனர்.

பெண்கள், ஆண்கள் பிரிவில்  இளையோர் , மூத்தோர் உள்ளிட்ட பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது.

இதில் தமிழகம்  சார்பில் 12 பேர் பங்கேற்றனர்.  தொடர்ந்து நடைபெற்ற போட்டிகளில் தமிழகத்தில் இருந்து கலந்துகொண்ட 12 பேர் சிலம்பம், சுருள்வாள், வேல்கம்பு, கேடயம் ஆகியவற்றில் வெற்றி பெற்று தங்க பதக்கமும், ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் கோப்பையும் வென்றனர்.

இதில் கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி ஏ.ஆர். ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் கலந்துகொண்ட ஜோன்ஸ் நேதன் ,அஜீஸ், கண்ணன், இஷானா ஸ்ரீ, பூர்ணிஷா, திரனேஷ் உள்ளிட்ட 5 பேரில்  தனியார் பள்ளி ஆசிரியை பூர்ணிஷா மற்றும் அவரது 7 வயது மகன் திரனேஷ் தங்கம் வென்றனர்.


இதனை தொடர்ந்து வெற்றி பெற்று கோவைக்கு ரயில் மூலம் வந்த மாணவர்களுக்கு ரயில் நிலையத்தில் மாணவர்களின் பெற்றோர் மற்றும்  உறவினர்கள்  மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.

இதுகுறித்து சிலம்பம் பயிற்சியாளர் ராஜேந்திரன் கூறுகையில்

"தேசிய அளவில் நடைபெற்ற சிலம்பம் போட்டிகளில் தமிழகம் சார்பில்  12 பேர் கலந்து கொண்ட நிலையில் அனைத்து பிரிவுகளிலும் தங்கம் வென்று ஒட்டுமொத்த சேம்பியன்ஷிப் பட்டத்தை தமிழக அணி வென்றுள்ளது. இது தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது பாரம்பரிய கலைகளை கற்கும்  மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டிலும் வேலை வாய்ப்புகளிலும்  முன்னுரிமை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்றார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe