வியாபாரி உட்பட 3 பேரிடம் கத்தி முனையில் பணம் பறித்த 5 பேர் கைது...

published 1 year ago

வியாபாரி உட்பட 3 பேரிடம் கத்தி முனையில் பணம் பறித்த 5 பேர் கைது...

கோவை: கோவையில் வெவ்வேறு இடங்களில் வியாபாரி உட்பட 3 பேரிடம் கத்தி முனையில் பணம் பறித்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை சிவானந்தா காலனி காந்தி நகரை சேர்ந்தவர் உதயகுமார் (23). தொழிலாளி. இவர் நேற்று மேட்டுப்பாளையம் ரோடு சக்தி மாரியம்மன் கோயில் பின்புறம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த வாலிபர் ஒருவர் உதயகுமாரை கத்தி முனையில் மிரட்டி அவரிடம் இருந்த 300-ஐ பறித்து கொண்டு தப்பினார். இது குறித்து உதயகுமார் சாயிபாபா காலனி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், பணம் பறித்தது அன்னூர் குரும்பபாளையத்தை சேர்ந்த வெல்டர் விக்னேஷ்(26) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில அடைத்தனர்.

மேலும் காரைக்குடியை சேர்ந்தவர் சிவா(34). இவர் சிங்காநல்லூர் பஸ் நிலையம் அருகே தள்ளுவண்டியில் மணிபர்சு, பெல்ட் வியாபாரம் செய்து வருகிறார். நேற்று வழக்கம்போல சிவா வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 பேர் பெல்ட், மணிபர்சு வாங்கி விட்டு பணம் கொடுக்காமல் தகராறு செய்தனர். பின்னர் சிவாவை கத்தி முனையில் மிரட்டி ரூ. 300 ஐ பறித்து தப்பினர். சிவா அளித்த புகாரின் பேரில் சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், பணம் பறித்தது காளப்பட்டி என்ஜிஆர் தெருவை சேர்ந்த சூரி(22), காளப்பட்டி பழைய போஸ்ட் ஆபீஸ் தெருவை சேர்ந்த சூர்யா(20) என்பது தெரியவந்தது. போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


இதேபோல், கோவை கண்ணப்ப நகர் தயிர் இட்டேரி ரோட்டை சேர்ந்தவர் முத்துவேல்(27). இவர் துரித உணவகம் நடத்தி வருகிறார். நேற்று முத்துவேல் சாயிபாபா காலனி பிஎன் புதூரில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 பேர் கத்திமுனையில் பணம் கேட்டு மிரட்டினர். அவர் கொடுக்க மறுத்ததால் 2 பேரும் அவரிடம் இருந்த ரூ. 220 ஐ பறித்து கொண்டு தப்பி சென்றனர். இது குறித்து முத்துவேல் சாயிபாபா காலனி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கத்தி முனையில் பணம் பறித்த திருப்பூர் தாராபுரம் ரோடு சந்திராபுரத்தை சேர்ந்த சிராஜூதீன்(22), திருப்பூர் வெள்ளியங்காட்டை சேர்ந்த ரமணா(21) ஆகிய இருவரை கைது செய்தனர். பின்னர் இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

நேற்று ஒரே நாளில் கோவை மாநகரில் பணம் பறித்த வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe