ஒரே இடத்தில் இத்தனை உணவுகளா, கோவையில் துவங்கியது ஹைதராபாத் உணவு திருவிழா...

published 1 year ago

ஒரே இடத்தில் இத்தனை உணவுகளா, கோவையில் துவங்கியது ஹைதராபாத் உணவு திருவிழா...

கோவை: கோவையில் ஹைதராபாத் உணவு திருவிழா துவங்கியது.

 

கோவை, ரேஸ்கோர்ஸில் உள்ள தாஜ் விவாந்தா ஓட்டலில், ஹைதராபாத் உணவு  திருவிழா துவங்கியுள்ளது. இன்று துவங்கி 10 நாட்கள் நடைபெற உள்ள இதில்,ஐம்பதுக்கும் மேற்பட்ட சைவ,அசைவ உணவு வகைகள் பரிமாறபடுகின்றன.

 

இந்திய உணவு வகைகளில் ஹைதராபாத் உணவு வகைகள் உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளிலும் அனைவராலும் அதிகம் விரும்பும் உணவு வகைகளாக உள்ளது. இந்நிலையில் கோவையை சேர்ந்த உணவு பிரியர்களுக்காக, தாஜ் விவாந்தா ஓட்டலில் உள்ள லாட்டிடுயூட் ரெஸ்டாரெண்டில் ஹைதரபாதி உணவு திருவிழா துவங்கி உள்ளது.

அக்டோபர் 1ம் தேதி வரை பத்து நாட்கள் நடைபெற உள்ள இந்த உணவு திருவிழா,ஹைதராபாத் தாஜ் கிருஷ்ணாவில் இருந்து பிரபல சமையல் கலை நிபுணர் பிலால் கான்  வருகை தந்து, ஹைதராபாத்  உணவுகளை சமைத்து தருகிறார். சைவ,அசைவ உணவு பிரியர்களை கவரும் விதமாக  கபாப் இ பிர்தௌஸ்,அஜ்வைனி மக்கி டிக்கா,பன்னீர் அக்தரி கபாப், தம் கா முர்கு, பிரபல ஹைதரபாத் மட்டன் பிரியாணி,மற்றும் எல்லா நேரங்களில் விரும்பும் டபுள் கா மீத்தா,குபாணி கா மீத்தா என ஐம்பதுக்கும் மேற்பட்ட உணவு வகைகள் பரிமாற உள்ளதாக தாஜ் விவாந்தா ஓட்டலின் விற்பனை இயக்குனர் பிரேம் தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe