வீடு புகுந்து ஐடி ஊழியரை தாக்கிய 5 பேரை போலீசார் கைது...

published 1 year ago

வீடு புகுந்து ஐடி ஊழியரை தாக்கிய 5 பேரை போலீசார் கைது...

கோவை: சரவணம்பட்டியில் வீடு புகுந்து ஐடி ஊழியரை தாக்கிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் வெங்கடாசலபுரத்தை சேர்ந்தவர் பூசா கங்காவராகவன்(23). ஐடி ஊழியர். இவர் கோவை சரவணம்பட்டி நமச்சிவாயநகரில் உள்ள ஒரு அபார்ட்மெண்டில் தனது நண்பர்களுடன் வீடு எடுத்து தங்கி வேலைக்கு சென்று வருகிறார். 3வது மாடியில் வசிக்கும் இவர்களுக்கும், 2வது மாடியில் வசிக்கும் சிலருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதேபோல், நேற்றும் அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரடமைந்த 5 பேர் கும்பல் பூசா கங்காவராகவன் வீட்டுக்குள் புகுந்து அவரை தகாத வார்த்தைகளால் பேசி இரும்பு கம்பியால் தாக்கினர். இதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இது குறித்து சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து ஐடி ஊழியரை தாக்கிய கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த அரவிந்த்(29), காட்வின், தூத்துக்குடியை சேர்ந்த முத்துராஜ்(32), நீலகிரியை சேர்ந்த நிதீஷ்(31), ஈரோட்டை சேர்ந்த சூர்யமுத்து பிரகாஷ்(27) ஆகிய 5 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe