ஏலக்காய் வியாபாரியிடம் 14.45 லட்சம் மோசடி- 7 பேர் மீது வழக்குப்பதிவு...

published 1 year ago

ஏலக்காய் வியாபாரியிடம் 14.45 லட்சம் மோசடி- 7 பேர் மீது வழக்குப்பதிவு...

கோவை: ஏலக்காய் வியாபாரியிடம் ரூ. 14.45 லட்சம் மோசடி செய்த 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை பூந்தமல்லி நசரத்பேட்டையை சேர்ந்தவர் நந்தகுமார்(48). ஏலக்காய், மிளகு மொத்த வியாபாரி. இந்நிலையில், கோவை ராமநாதபுரம் கொங்குநகரில் செயல்பட்டு வரும் வணிக நிறுவனத்தில் பர்ச்சேஸ் மேலாளராக பணியாற்றி வரும் மோசஸ் மெத்தே என்பவர் கடந்த ஏப்ரல் மாதம் நந்தகுமாரை தொடர்பு கொண்டார். அவர் தங்களது நிறுவனத்துக்கு ஏலக்காய் அனுப்பி வைக்குமாறு கேட்டு கொண்டார். 

இதனைத்தொடர்ந்து சில நாட்கள் கழித்து கோவை வந்த நந்தகுமாரிடம் மோசஸ் மெத்தே தங்களது நிறுவனத்தில் வேலை பார்ப்பதாக 6 பேரை அறிமுகப்படுத்தி வைத்தார். மேலும், அவர்கள் ஏலக்காயை அனுப்பி வைத்தால் உடனே பணம் கொடுத்து விடுவதாகவும் தெரிவித்துள்ளனர். இதனை நம்பிய நந்தகுமார் ரூ. 14.45 லட்சம் மதிப்பிலான ஏலக்காயை கோவைக்கு அனுப்பி வைத்தார். ஆனால் ஏலக்காயை பெற்று கொண்ட மோசஸ் மெத்தே உட்பட 7 பேரும் பணம் கொடுக்கவில்லை. 

பணத்தை பலமுறை கேட்டும் கொடுக்காமல், அவர்கள் ஏலக்காய் வியாபாரி நந்தகுமாரை மிரட்டியுள்ளனர். இது குறித்து நந்தகுமார் கோவை ராமநாதபுரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் நந்தகுமாரிடம் ஏலக்காய் வாங்கி ரூ. 14.45 லட்சம் மோசடி செய்ததாக கோவையை சேர்ந்த புருசோத்தமன், காஜா உசேன், மருதாச்சலம், கீதாஞ்சலி, பரத், ஆனந்த், மோசஸ் மெத்தே ஆகிய 7 பேர் மீது நம்பிக்கை மோசடி பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe