கோவையில்2 பெண் குழந்தைகளை மிரட்டி பலாத்காரம்.. கொடூர தந்தை கைது…

published 1 year ago

கோவையில்2 பெண் குழந்தைகளை மிரட்டி பலாத்காரம்.. கொடூர தந்தை கைது…

கோவையில்2 பெண் குழந்தைகளை மிரட்டி பலாத்காரம்.. கொடூர தந்தை கைது…

கோவை: கோவை சேர்ந்தவர் 36 வயது தொழிலாளி. இவருக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணமான சில மாதங்களிலேயே அவரை அவரது மனைவி பிரிந்து சென்றார். பின்னர் தொழிலாளி 2வதாக வேறு ஒரு இளம் பெண்ணை காதலித்து திருமணம் செய்தார்.

இவர்களுக்கு 14 வயதில் ஒரு மகளும் 10 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் அதேபகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 9 மற்றும் 5ம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஒரு ஆண்டாக தொழிலாளி அவரது 2 மகள்களையும் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இதனை வெளியே கூறினால் மாணவிகளின் தாய் மற்றும் 2 பேரையும் கழுத்தை நெரித்து கொலை செய்துவிடுவதாக மிரட்டி வந்தார்.

இதனால் மாணவிகள் நடந்த சம்பவத்தை யாரிடமும் சொல்லாமல் மறைத்தனர். இந்த நிலையில் மாணவிகள் படிக்கும் பள்ளியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோவை மாவட்ட குழந்தைகள் நல அமைப்பு சார்பில் பெண் குழந்தைகளுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அப்போது குழந்தைகள் நல அமைப்பினர் மாணவிகளிடம், யாராவது பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்தால் தைரியமாக புகார் அளிக்கலாம் என்று தெரிவித்தனர்.

அப்போது தான் மாணவிகள் இருவரும் தங்களது தந்தை கடந்த ஒரு ஆண்டாக மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளித்தனர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த குழந்தைகள் நல அமைப்பினர் இதுகுறித்து மத்திய அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு பெற்ற 2 பெண்குழந்தைகளை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளியை கைது செய்தனர்.

பின்னர் அவரை கோர்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைக்கும் பணியை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe