கோவையில் முதியவர் மீது பெப்பர் ஸ்பிரே தூவி கொள்ளை

published 1 year ago

கோவையில் முதியவர் மீது பெப்பர் ஸ்பிரே தூவி கொள்ளை

கோவை: கோவையில் முதியவர் மீது பெப்பர் ஸ்பிரே தூவி மோனோகுலர்களை கொள்ளையடித்த 6 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.

கோவை கணபதி கட்டபொம்மன் நகரை சேர்ந்தவர் யோகநாதன்(59). பழங்கால பொருட்களை சேகரிப்பதில் ஆர்வம் கொண்ட இவர் தனது வீட்டில் பழங்கால பொருட்களை பராமரித்து வருகிறார். மேலும் தன்னிடம் உள்ள பழைய மோனோகுலர்களை விற்பனை செய்து தருமாறு இடைத்தரகர் ஒருவரிடம் தெரிவித்திருந்தார்.

அவர் கடந்த மாதம் யோகநாதன் வீட்டுக்கு சிலரை கூட்டி வந்துள்ளார். அவர்கள் மோனோகுலர் பற்றிய தகவல்களை யோகநாதனிடம் கேட்டு விட்டு பிறகு வந்து பணம் கொடுத்து வாங்கி செல்வதாக கூறி விட்டு சென்றுள்ளனர். இந்நிலையில், நேற்று யோகநாதன் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது ஏற்கனவே அவரது வீட்டுக்கு வந்து மோனோகுலரை பார்ந்து சென்ற 6 பேர் கும்பல் மீண்டும் வந்தனர்.

அவர்கள் யோகநாதனிடம் மோனோகுலர்களை வாங்க வந்துள்ளதாக பேச்சு கொடுத்து கொண்டே அவரது முகத்தில் திடீரென பெப்பர் ஸ்பிரே அடித்தனர். இதில் நிலைகுழைந்த அவர் மயங்கி விழவே அந்த கும்பல் அங்கிருந்த விலை உயர்ர்ந்த 3 மோனோகுலர்களை கொள்ளையடித்து சென்றனர். பின்னர் சற்று நேரம் கழித்து எழுந்து பார்த்த யோகநாதனுக்கு வீட்டில் இருந்த மோனோகுலர்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உடனே அவர் இது குறித்து சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில் கொள்ளையில் ஈடுபட்டது கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த நசீப்(37), பசீர் (45), சாதிக்(34), மனோஜ்குமார்(49), ரம்சீத்(36), பாலக்காட்டை சேர்ந்த ரவிச்சந்திரன்(46), ஆகிய 6 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe