கோவையில் பெண்கள் குளிப்பதை மறைந்திருந்து வீடியோ எடுத்த வாலிபர் கைது

published 1 year ago

கோவையில் பெண்கள் குளிப்பதை மறைந்திருந்து வீடியோ எடுத்த வாலிபர் கைது

கோவை: கோவையில் பெண்கள் குளிப்பதை மறைந்திருந்து தனது செல்போனில் வீடியோ எடுத்து ரசித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்தவர் 38 வயது பெண். கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் வேலை முடிந்து வீட்டுக்கு வந்தார். பின்னர் குளியலறைக்கு சென்றபோது அதன் பின்புறம் வாலிபர் ஒருவர் தனது செல்போனை கையில் பிடித்தவாறு நின்று கொண்டிருந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த பெண் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அந்த வாலிபரை மடக்கி பிடித்தார்.

அவரிடம் இருந்த செல்போனை வாங்கி பார்த்த போது அந்த வாலிபர் ஏற்கனவே அந்த பெண் குளிப்பதையும், அதேபோல், அந்த தெருவில் உள்ள சில பெண்கள் குளிப்பதையும் தனது செல்போனில் வீடியோ மற்றும் போட்டோ எடுத்து வைத்துள்ளார். இது குறித்து அந்த பெண் வடவள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்து ரசித்தது வடவள்ளி ராஜீவ்காந்தி நகரை சேர்ந்த வெல்டிங் தொழிலாளி சந்தோஷ்(21) என்பது தெரியவந்தது. மேலும் அவரது செல்போனை கைப்பற்றியதில், அதில் பெண்களில் குளியல் வீடியோக்களை எடுத்து வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் சந்தோசை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்து ரசித்த வாலிபரால் அந்த பகுதி பெண்களிடையே அதிர்ச்சியையும், பயத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe