குடிபோதையில் தகராறு.பைனான்ஸ் ஊழியருக்கு கத்திக்குத்து நள்ளிரவில் பரபரப்பு

published 2 years ago

குடிபோதையில் தகராறு.பைனான்ஸ் ஊழியருக்கு கத்திக்குத்து நள்ளிரவில் பரபரப்பு

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் :  https://chat.whatsapp.com/KsPYwSVgSwPDblO1iteFxE

கோவை: கோவை காந்திபுரம் 100 அடி சாலை நாயுடு லே அவுட் முதல் வீதியை சேர்ந்தவர் குணா.தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார்.நேற்று இரவு அதே பகுதியை சேர்ந்த டிரைவர் சந்தோஷ் என்பவருடன்  காந்திபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் 10 மணிவரை மது அருந்தி உள்ளனர்.

பத்து மணிக்கு டாஸ்மாக் பார் மூடியதால் மது வாங்கிவிட்டு வாங்கிவிட்டு இருவரும் காந்திபுரம் வந்த இருவருக்கும் அந்தப் பகுதியில் மது குடித்துள்ளனர்.  

அப்போது இருவருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு  தகராறாக மாறியது.இதில் ஆத்திரமடைந்த  குணா திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சந்தோசை சரமாரியாக குத்தினார்.இதில் வலி தாங்க முடியாமல் சந்தோஷ் அலறியுள்ளார்.

அவரின் சத்தத்தை கேட்டு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ரத்தினபுரி போலீசார் அங்கு தகராறில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இருவரையும் விலக்கி கத்தி குத்து காரணமாக பலத்த காயங்களுடன் இருந்த சந்தோஷ் மற்றும் லேசான காயங்களுடன் இருந்த குணா ஆகியோரை மீட்டு  கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த ரத்தினபுரி  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நள்ளிரவு நேரத்தில் சாலையில் வைத்து ஒருவரையொருவர் கத்தியால் குத்திக் கொண்ட சம்பவம் காந்திபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe